31 October, 2008
அழகிய பொய்கள்
04 October, 2008
kirukkalgal
கவிதை சொல்ல முயன்றேன்
உணர்வுகள் வார்த்தையாக மறுத்தது
ஏன் இந்த வறுமை என்று வார்த்தைகள் தேடினேன்
வார்த்தைகளின் வறுமை வரட்சியானது.. வானம் பாலைவனமானது..
என் வசந்த காலம் வார்த்தைகளில் இல்லையடி பெண்ணே..
நீ சிரித்தால் என் கிறுக்கலும் கவிதை ஆகுமடி.
18 September, 2008
chinna chinna kirukkal
வானின் ஒற்றை நிலவை கண்டேன்..
அளவில்லா அழகுடன் மிதந்த ஜோதி
மனதில் எழுப்பிய முதல் ஒளி
உன்முகம் தான் அன்பே..
நீ இல்லாமல் முழு நிலவும் இருண்டதடி,
02 July, 2008
going green
Daily to my work I used to travel from my place [Anakaputhur] to Pallavaram approx 4 kms using my 2 wheeler for comfort reasons.. Now I replaced my 2 wheeler with new AXN-DX bi-cycle for attacking two problems fitness and eco-friendly..
Motivations/Interests for new bi-cycle
fitness: My old photo album with friends and family.. Like many I too preferred to be slim and fit.. but because of my lazyness I put on some weight which really pulls of my confidence and comfort..
Hari advised us [me and mama] to jog or run daily.. I know its really hard for me to wake up early and do such good things.. I enjoyed cycling so I convinced myself to go for cycling on daily basis for solving the problem..
Eco-friendly: Green peace members visited our company 2 weeks back and made some presentation on our contributions to global warming or climate change or pollution.. whatever worst things that happening related with CO2 emission..
Those are facts that mentioned I am also part of the group which is spoiling the world while seeking comfort for themselves..
Our actions may not solve the problem completely but we have do what we can.. lets join hands together to fight against our own comfort attitudes..
14 June, 2008
back to chennai
The original plan of my trip was a long term one, since my project was scrapped I was called back to my base branch Chennai. There is small chance that I may travel back after 3 or 4 months, but It may not happen as I was the one who was identified as SPOC [single point of contact] for the team over here formed newly for ING and Citistreet merger preperations, composed of 8 real masters currently. I was really added up with resposibilities that I was dreaming.
I like to post more frequently, but I am not able to do so. Since I am in chennai I am able to be in touch with many of my friends, frequent calls and seldom visits makes my life busy than the calm and lonely life in US.
As many others I am also not organised, I am planning for organinsing things better in my life. so I am starting with the things that requires some pre-requisites which I already have. so will update you all on what I tried and what I acheived byAugust 15th.
have a gud day.
12 May, 2008
10 May, 2008
சினிமா
அன்பு, ஆனந்தம், ஆக்ரோஷம்,
காதல், காவியம், கனவு ஆகிய அனைத்தையும் கதையாக சொல்லும் சினிமா இன்றைய அறிவியல் உலகத்திலும் ஆரோக்யமாக இருக்கிறது என்பது எதார்த்தம்.
நான் அதிகமாக என் நேரத்தை வீனக்குவது இந்த வீணாப்போன சினிமாவால்தான். எனக்கு காதல், அதிரடி, காமெடி மற்றும் விஞ்ஞான ரீதியான படங்கள் ரொம்ப இஷ்டம். நான் மட்டுமல்ல எல்லாருக்கும் இஷ்டம் என்பதால் தான் இந்த நான்கில் ஒன்றாவது திரைப்படத்தின் கருவாக வைக்கப்பட்டுள்ளது.
நம் நிஜ வாழ்வில் நடப்பதை.. இல்லை நடக்கும் என்று நம்புவதை.. உரு கொடுத்து.. வண்ணம் பூசி, வாசம் தூவி, சீவி சிங்காரித்து ஒரு கலவையாக்கி அதற்க்கும் மெருகேற்றி அழகுபடுத்தி.. நமக்கு படைக்கிறார்கள்..கழுதை போன்ற நம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அலங்கரித்து பட்டத்து குதிரையாக தொற்றுவிக்கிறார்கள்.
நம் கனவுகள் நம் முன்னால் தொகை விரித்து ஆடும் அழகை பார்ப்பது விந்தை இல்லை எதார்த்தம் தான். இசையை விருந்தாக கொண்ட படங்கள் பல நம் நெஞ்சை கொல்லையடித்திருக்கும். ரஹ்மான் கோடி கோடி ரசிகர்கள் கொண்டான் அவன் இசை கொண்ட வசையால்.
சமிப காலமாக நான் மிகவும் விரும்பி பார்ப்பது
காதலன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள்,
நாயகி நாயகன் மீது காதல் வசப்படும்போது,
நாயகன் நாயகி காதல் வெல்ல சூழ்நிலைகள் உதவும் கட்சிகள்..
இதை எல்லாம் பெருமூச்சு விட்டு பார்க்கிறேன்.. இதிலெல்லாம் நான் என் நிஜ வாழ்வில் தோற்றது, இழந்தது.. என் காதல் கதை சொல்ல ஆசை தான் என்ன செய்ய என் காதல் நிஜமானதால் மலரும் நினைவுகள் சில கசப்பான சம்பவங்கள் பல..
காமெடியன் அடி வாங்கன சிரிப்பது, ஹீரோ அடி வாங்கன பீல் பண்ணுவது.. இதுக்கெல்லாம் என்ன காரணம்.. நம்மள ஹீரோவாவும்.. ஜாலியா இருக்கற நண்பர்கள காமெடியனாகவும் நினைக்கறதுதான்.. நிஜம் என்னன்னா யாரு அடி வாங்கினாலும் நாம பரிதாப படுவோம்.. ஆனா கதைல அடி வாங்கறத காமெடிய எடுத்துக்குறோம்.. இது போதுமே நிஜத்தையும் நிழலையும் பிரித்து காட்ட.. இது எத்தனை பேருக்கு பொருந்தும்னு தெரியல..
என்னக்கு பிடித்த சில பாடல்கள்/கட்சிகள் சில கீழே
நன்றி
05 May, 2008
தேவதையின் சாபம் - 1
தன்னை ராஜகுமரனாக பார்க்கும் பெற்றோர், தளபதியாக பார்க்கும் நண்பர்கள் என உண்மையான ராஜாவாக வளர்ந்துவந்தான். இந்த ராஜாவுக்கு வணவாசமாக பெங்களூரில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.
சொல்லப்போனால் நம்மைபோல ஒருவன் :)
கனவு உலகத்தில் வாழும் இவன்னுக்கு நெரிசலான சென்னையும் பெயருக்கு ஏற்ற மாதிரி சிங்கார சென்னையாக தெரிந்தது.. உலகத்தை வெல்ல புறப்படும் போர் விரன்போல் சந்தோசமும் கவலையுமாக பெங்களூருக்கு புறப்பட்டான் நம் ராஜா.
கயல்விழி என்கிற கயல்.. சென்னை வாசித்தான் அனால் "Chennai is a dirty place" அப்படின்னு பிலிம் ஓட்டுவ.. காரணம் அவளின் உறவினர்களும்.. அவள்களின் கலாச்சாரமும்.. ரொம்ப ரொம்ப ஆச்சாரம் பார்பவர்கள்.. வேறு மத மக்களிடம் பேசுவதை கூட யோசிப்பவர்கள்.. :( [இப்படியும் பலர் இருக்கிறர்கள்]
சென்னையில் அப்பா அம்மா உறவியானர்களை விட்டு பள்ளி படிப்பை ஊட்டியிலும், கல்லூரி படிப்பை கோயம்புத்துர்ரிலும் நிறைவேற்றினால்..
பெங்களூரை சேர்ந்த ஒரு நல்ல கம்பெனியில் விரும்பிய வேலையையும் பெற்றால். தங்களுடன் இல்லாததால் அவள் குடும்பத்தில் எல்லாரும் கயல்விழிமீது மிகவும் நேசம் / பாசம் காட்டினர்.. குடும்பத்தின் பாச மழையில் நினைந்தவன்னம் பெங்களூருக்கு புறப்பட்டால் கயலும்..
தன் நண்பர்களில் அறிவுரையும், அந்த வயதுக்கே உரிதன ஆசைகளுடன் இவன் பயணம் தொடர்ந்தது..
தான் விரும்பிய வேலை, தான் விரும்பிய வாழ்க்கை என மன நிம்மதியில் இவள் பயணம் தொடர்ந்தது..
முதல் அனுபவம் எல்லோருக்கு நிச்சயமாக ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.. [புதுசா இருப்பதால் தான் அதை முதல் அனுபாவம் என்கிறார்கள்]..
புதிதான சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள், ஏக்கங்கள் இவைகளுடன் வந்தவன் நண்பனின் நண்பன் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தான். ஓரிரு நாட்கள் முன்னதாக வந்தவனுக்கு வீட்டில் கால்கள் கட்டுப்படவில்லை. நகரை சுற்றிபர்க்க கிளம்பிவிட்டான்.. எம்.ஜி. ரோடு.. பெங்களூரில் மிக பெயர்போன இடம்.. முதல் முறை வருவதால் அங்கு உள்ள எல்லா கடைகளையும் சிறிது நேரம் நோட்டம் விட்டு உலாவந்தான்.. அப்படி வருகையில் ஒரு தென்றல் அவனை மட்டும் விரட்டியது.. அந்த தேவதையின் சிறகுகள் மெல்ல இவனை தழுவ இவன் முட்டும் வானில் மிதந்தான்.. தன்னை மறந்த அந்த வினாடியில் அந்த பெண்ணின் முகவரியும் தொலைத்தான்.
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களை கொண்டு பிரம்மாண்டமான ஓவியங்கள் நம் முன்னால் இருந்தாலும்..
சில வினாடிகள் தோன்றி மறையும் வானவில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது..
நாம் அந்த அழகை மறுமுறை காணும் வரை நீடிக்கும்..
இந்த வாரம் டிக்கெட்ஸ் [வேலை] சுலபமாக இருக்க வேண்டும் என்று வேண்டிய நண்பனுடன். அந்த பெண்ணை மறுமுறை நிச்சயமாக பார்போம் என்ற நம்பிக்கையில் ராஜாவும் வேலைக்கு புறப்பட்டான்.
****************************************************
நானும் வேலைக்கு போகணும்.. மிச்ச கற்பனைகள் முளைக்கும் பொது தொடர்வேன்.. நன்றிகளுடன்..
04 May, 2008
காதல் மழை
என்னவளின் இதழோரம் பூக்கும் புன்னகை
இயற்கைக்கே அழகு..
காதலித்தேன்
காலத்தை கடத்தினேன், அவள் தேன்விழிகளை பார்க்க..
அவளும் கடந்து சென்றால்
காத்திருந்த என் காலத்தோடு..
காதல் இரு உள்ளங்கள் இணைந்தது என்றால்.
எனக்காக ஒரு பெண்ணை காதலித்தேன்,
இது மெய்யானதா???
அவள் மீது கொண்ட காதலை சாரல் மழையாய் வெளிபடுதினேன்..
என் காதலை கண்டு வியந்தாள்..
வியந்தவள் சிலிர்க்கும் முன் சாதி எனும் கருப்பு குடையை தோன்றியது..
தன் ஆசையையும், காதலையும், கண்களையும் குடைக்குள் மறைத்தாள்..
நான் புயலாகாமல் இருந்தேன்..
அந்த தேவதை!!
என் காதலை உணராமல் எல்லைகளை கடந்துவிட்டால்..
இன்று நான் கண்ணீர் மழையில்.. புன்னகையுடன் அவளுக்காக..
03 May, 2008
செவிச் செல்வம்
இந்த வெள்ளி நான் கற்றது.. இல்லை நான் கற்றதை பதித்தது எனலாம்.. நாம் எல்லோரும் நம் நண்பர்களுடன் நீண்ட நேரம் நம்மை பற்றியே பேசிக்களிப்போம் .. இங்கு நாம் மணிக்கணக்கில் நம்மை பற்றியும், நம்
சுற்றத்தார்களை பற்றியும் தான் அதிகமாக பேசுவோம்..
என்னுடன் பணியாற்றுபவர் "TOTO".. நாங்கள் இது வரை எங்கள் வேலைக்கும் ஈடுபாடு இல்லாத எந்த விஷத்தையையும் பேசியது இல்லை.. கடுமையான வேலைகள் சற்று ஓய்ந்து இருந்ததால்.. கணினியின் கரைகளை தாண்டி நண்பர்களின் தீவில் சற்று இளைபாறினேன்.. என் செவிகள் அவர்களின் உள்ளுணர்வுகளை கைப்பற்றியது.. என் மரியாதைக்கு உரிய "TOTO".. நான் மிக அதிகமாக போற்றும் மனிதர்களில் ஒருவராக உயர்ந்தார்..
நான் இதுவரை என்னுடைய பார்வையில் மற்றவர்களை கணக்கிட்டேன்.. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன்.. நாம் சுயநலவாதிகள் தான்.. எப்போதும் எதிர்பர்த்துகொண்டு இருக்கிறோம்.. இப்போது கூட பாருங்கள் நான் என் பார்வையில் எல்லோரும் சுயனலவதிகள் என்கிறேன்.. இது நான் இதுவரை செய்த பிழை.. என்ன செய்ய இவை அனைத்தும் என் எண்ணத்தில் அழமாக உடுரிவியவை.. சல இல்லை பல நாட்கள் ஆகும் இத்தகைய பண்பட்ட விதிமுறைகளை மாற்றுவதற்கு.. நான் இன்றில் இருந்து முயற்சிக்கிறேன் மற்றவர்களின் எண்ணங்களை கேட்பதற்கும் உணர்வதற்கும்..
சற்று என் சரித்திரத்தை புரட்டினேன்.. நானும் சில நேரங்களில் என் சுற்றத்தாரின் உணர்வுகளுக்கு சற்றி செவி தாழ்த்தி இருக்கிறேன்.. அதனால் தான் என்னவோ பல நல்ல நண்பர்களும், சில அழகான உறவுகளும் எனக்கு வரமானதாக பெருமைகொள்கிறேன்.. அந்த சில தருணங்களை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டுகிறேன்..
இவை செல்வங்கள் அல்ல வரங்கள்.. மனிதனை மனிதனாக்கும் வரங்கள்.. வரமளித்தவனுக்கே எல்லா புகழும்..